All the participating children will receive a certificate.
1. குறள் எண் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. As A is the first for all the letters so is the eternal God for the world. 2. குறள் எண் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும். Jealousy, greed, anger and harsh words are the four evils to be avoided for the righteous path. 3. குறள் எண் 72 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். Loveless people will posses everything for themselves. Whereas people with compassion will dedicate everything for others including themselves. 4. குறள் எண் 100 இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும். To say harsh words instead of the pleasant ones at hand is like preferring to eat unripe fruits when you have ripe fruits in hand. 5. குறள் எண் 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. Forgetting someone’s act of kindness is not good but forgetting a wrong doing at once is good. 6. குறள் எண் 121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். Self control /discipline leads one in to heaven but indiscipline leads one into endless darkness. 7. குறள் எண் 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும். Speak only such words which are worth saying and do not speak worthless words. 8. குறள் எண் 282 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும். Even to think in one’s heart about stealing other’s wealth by stealth is a sin. 9. குறள் எண் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும். Truthfulness is to speak that which will not bring harm to others. 10. குறள் எண் 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே. The way to punish a wrong doer is to do him good thus he will be ashamed of himself.